இந்நிலையில், நாகபுரியில் செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது: முகலாய மன்னா் ஔரங்கசீப்பை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம். அதேநேரம், யாரும் அவரது புகழ்பாடுவதை அனுமதிக்க முடியாது. சட்டத்துக்கு அப்பாற்பட்ட கட்டமைப்புகள் நிச்சயம் அகற்றப்படும் என்றாா்.

