முதல் 130 நாள்களுக்குள் பற்றாக்குறையை ஒரு டிரில்லியன் டாலர்கள் குறைக்கத் தேவையான பெரும்பாலான பணிகளை முடித்துவிட்டோம்.
தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும் முறைகேடுகளைக் கண்டறிந்து நிறுத்துவதும் தான் எங்கள் முதல் நோக்கம். இதற்காகவே நாங்கள் வேலை செய்து வருகிறோம். எங்களின் நடவடிக்கையால் $4 பில்லியன் டாலர் சேமிக்க முடிகிறது.

இதுவரை நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியைத் தருவதாகவே இருக்கிறது. எங்கள் நடவடிக்கை வெற்றி அடையாமல் போனால் அமெரிக்கா கடனில் மூழ்கிவிடும்.
முக்கியமான அரசு சேவைகளையும் பாதிக்காமல் 15 சதவீதம் வரை செலவைக் குறைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். இந்த பணிகளை எல்லாம் முடித்துவிட்டு மே மாதம் நான் DOGE துறையில் இருந்து விலகலாம்” என்று கூறியிருக்கிறார்.

