Last Updated:
ஏப்ரல் 5ஆம் தேதி பிரதமர் மோடி இலங்கை செல்வதாக அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே தகவல் தெரிவித்துள்ளார். இருநாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு…
ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இலங்கை அதிபராக பதவியேற்ற அனுரா திசநாயக, டிசம்பரில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி மற்றும் அனுரா திசநாயக ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அனுரா திசநாயக, முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 5 ஆம் தேதி இந்தியா வர இருப்பதாக கூறினார். அப்போது திரிகோணமலையில் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று திசநாயக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : போதைப் பொருள் கடத்தல் வழக்கு.. இந்தோனேசியாவில் 3 தமிழர்களுக்கு மரண தண்டனை?
இது, இலங்கை மின்சார வாரியம் மற்றும் இந்தியாவின் தேசிய வெப்பமின் கழகம் இணைந்து செயல்படுத்தும் திட்டம் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இலங்கை செல்லும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
March 22, 2025 2:24 PM IST
ஏப்.5-ல் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி… முக்கிய ஒப்பந்தங்களில் கையழுத்திட வாய்ப்பு


