ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
தற்போது, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விவாதம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்ததன் பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இறுதி உரை
இதன்படி, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி உரையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிகழ்த்த உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

