நிர்மா வாஷிங் பவுடர்
90களில், தூர்தர்ஷன் காலத்தில், நிர்மா வாஷிங் பவுடர் என்ற விளம்பரம் மக்களை மிகவும் கவர்ந்தது. ஆனால் காலப்போக்கில் நிர்மாவின் பெயரும் தடயமும் அப்படியே மறைந்துவிட்டது. இப்போது மக்களிடையே ஏரியல், டைட் மற்றும் சர்ஃப் எக்செல் போன்ற பிராண்ட்கள் தான் பிரபலமாக உள்ளன. ஆனால், இவ்வளவு பிரபலமான வாஷிங் பவுடர் பிராண்ட் ஏன், எப்படி வீழ்ச்சிக்கு சென்றது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நிர்மாவின் பெயரும் விளம்பரமும் மிகவும் பிரபலமாக இருந்த காலம் அது. ஆனால், படிப்படியாக வளர்ந்து வந்த பிரபலமான நிர்மா வாஷிங் பவுடர் பளபளப்பான ஆடைகளின் பிராண்ட் அதன் பிரகாசத்தை இழந்தது.
நிர்மாவின் பின்னால் இருந்த மூளை யார்?
கர்சன்பாய் படேல், நிர்மா வாஷிங் பவுடரை ஒரு பெரிய பிராண்டாக மாற்றியிருந்தார். ஒரு காலத்தில் சைக்கிளில் பொருட்களை விற்று வந்த கர்சன்பாய், தனது கடின உழைப்பால் ரூ.17000 கோடி மதிப்பிலான தொழிலை உருவாக்கினார். கர்சன்பாய் தனது மகளின் பெயரில் சோப்புப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினார். தனது இளைய மகள் ஒரு நாள் உலகம் முழுவதும் புகழ் பெற வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் நிருபமா திடீரென ஒரு விபத்தில் உயிரிழந்தார். தனது மகளின் மரணத்தால் கர்சன்பாய் படேல் மிகவும் மனமுடைந்து போனார். இருப்பினும், அவர் தைரியத்தை இழக்கவில்லை. தனது மறைந்த மகளின் பெயரில் சோப்புப் பொருட்களை தயாரிக்கத் தொடங்கினார்.
Also Read: பண்டைய நாணயங்கள் முதல் ₹ சின்னம் வரை.. இந்திய ரூபாய் எழுதப்பட்ட 10 வழிகள்!
கர்சன்பாய் நிர்மா வாஷிங் பவுடரை விற்கத் தொடங்கினார். ஆனால் சந்தையில் உள்ள பெரிய நிறுவனங்களுடன் எவ்வாறு போட்டியிடுவது என்பது அவருக்கு முன் இருந்த மிகப்பெரிய சவால். இதற்காக, அவர் புதிய உத்திகளை கையாளத் தொடங்கினார். கர்சன்பாய் படேல் ஒவ்வொரு வாஷிங் பவுடர் பாக்கெட்டிலும் ‘துணிகள் சுத்தமாக இல்லாவிட்டால், பணத்தைத் திரும்பப் பெறு’ என்று எழுதி விற்பனையை தொடங்கினார். கர்சன்பாய் படேலின் இந்த யோசனை வேலை செய்தது, மக்கள் அவரது தயாரிப்பை வாங்கத் தொடங்கினர். கர்சன் பாய் படேல் தனது தொழில் வளர்ந்து வருவதைக் கண்டதும், அவர் தனது அரசாங்க வேலையை விட்டுவிட்டு சந்தையில் முழுமையாக கவனம் செலுத்தினார்.
முதலில் வளர்ச்சி, பின்னர் சரிவு
கர்சன்பாய் படேல் 1969இல் தொடங்கப்பட்ட நிர்மா, அதன் குறைந்த விலை மற்றும் பயனுள்ள சந்தைப்படுத்தல் காரணமாக 1990களில் சோப்பு சந்தையில் முன்னணி நிறுவனமாக மாறியது. அந்த நேரத்தில், அதன் சந்தைப் பங்கு 60%-ஐ எட்டியது. இருப்பினும், கர்சன்பாய் படேல் மற்றும் நிர்மா வாஷிங் பவுண்டருக்கான உண்மையான சவால் அப்போது தான் தொடங்கியது என்றே சொல்லலாம்.
சர்ஃப் எக்செல், டைட் மற்றும் பிற பிராண்டுகள் புதிய ஃபார்முலாவுடன் சந்தையில் நுழையத் தொடங்கியது. மறுபுறம், நிர்மாவால் இந்த பெரிய நிறுவனங்களின் உத்திகள் மற்றும் புதுமைகளுடன் போட்டியிட முடியவில்லை. இதன் பிறகு, நிர்மாவின் புகழ் படிப்படியாகக் குறைந்தது. ஒரு காலத்தில் 60% சந்தைப் பங்கைக் கொண்டு சந்தையை ஆண்ட நிர்மா, 2000களுக்குப் பிறகு வேகமாக சரிந்தது. இன்று அதன் சந்தைப் பங்கு சுமார் 6% ஆக உள்ளது.
விளம்பரமும் ஒரு பெரிய தவறாகும்
கர்சன் பாயின் நிறுவனமும் விளம்பரத்தில் ஒரு தவறைச் செய்தது. புதுமை என்ற பெயரில், அந்த நிறுவனம் ரித்திக் ரோஷனை அதன் பிராண்ட் தூதராக நியமித்தது. ஆனால் இந்த விளம்பரங்களை பெண்களுடன் அவர்களால் இணைக்க முடியவில்லை. நிர்மா சந்தையிலிருந்து வெளியேறியது. ஒரு காலத்தில் ஹேமா மாலினி உட்பட நான்கு பிரபல பாலிவுட் நடிகைகள் நிர்மா வாஷிங் பவுடருக்காக விளம்பரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
March 18, 2025 8:58 AM IST

