இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் குரிகிராம் பகுதியைச் சேர்ந்த சஃப்ருதீன்(வயது 36), இப்ராஹிம் (38) மற்றும் சொராப் (46) ஆகிய மூவரும் ஏற்கனவே சட்டவிரோதமாக இந்தியாவினுள் நுழைந்ததற்காக தங்களது தாயகத்திற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது மீண்டும் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்திய அதிகாரிகள் அவர்களை மீண்டும் வங்கதேசத்திற்கு நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, புது தில்லியில் 833 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 267 பேர் சந்தேகப்பட்டியலில் உள்ளதாகவும், அதில் 174 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 93 பேர் தாங்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியதாகவும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

