Last Updated:
மொரீசியஸ் நாட்டின் 57-ஆவது தேசிய தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றார். சிவப்பு கம்பள வரவேற்பு, பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதை, இந்தியர்களின் உற்சாக வரவேற்பு ஆகியவை நடந்தன.
இரண்டு நாள் பயணமாக மொரீசியஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மொரீசியஸ் நாட்டின் 57-ஆவது தேசிய தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அந்நாட்டுப் பிரதமர் நவீன் ராமகூலம் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போர்ட் லூயிஸ் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மொரீசியஸ் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் என 200 க்கும் மேற்பட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர விடுதிக்கு சென்றபோது, மொரீசியஸ் வாழ் இந்தியர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். அப்போது, பிரதமர் மோடி பெண் குழந்தையை கையில் எடுத்து கொஞ்சி மகிழ்ந்தார். போஜ்புரி மொழி பேசும் பெண்கள் பாடல் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்களை பிரதமர் மோடி கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்கிறார். மேலும் மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலத்தை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையின்போது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிதி மோசடியாளர்களை நாடு கடத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
March 11, 2025 12:59 PM IST