பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பாஜக உடன் கூட்டணி வைப்பதற்காக பலர் தவம் கிடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அவர் அதிமுகவை குறிப்பிட்டாரா? தவறாக பேச வேண்டாம். அப்படி யாரும் சொல்லவில்லை, தவறாக சொல்லாதீர்கள். 6 மாதம் கழித்து கூட்டணி பற்றி பேசப்படும் என தெளிவுப்படுத்திவிடேன். அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி, அதிமுக தொடங்கியது முதல் இப்போதுவரை எந்த கட்சி உடனும் கூட்டணிக்காக தவம் கிடந்ததற்கான சரித்திரம் கிடையாது என தெரிவித்து உள்ளார்.

