ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டநிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டார். சுயநினைவை அவர் இழந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.