சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையிலான கொதிப்பான உரையாடல் ஒரு சங்கடமான அரசியல் நிகழ்வு மட்டுமல்ல, உலக அரசியலின் மிக முக்கிய திருப்புமுனை. இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தவிருக்கிறது, முக்கியமாக இந்தியாவில்!
சர்வதேச அளவில் மாறிவரும் புவிசார் அரசியலில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பெரும் வரலாறு தொடங்குவதற்கு முதல் புள்ளியாக அமைந்த இந்த நிகழ்விலிருந்து இந்தியா எடுத்துக்கொள்ள வேண்டிய 5 முக்கிய பாடங்கள் இதோ…
பலவீனமாகும் மேற்கு கூட்டணி
பல தசாப்தங்களாக உலக அரசியல் நிலையுடன் இருப்பதில் ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்காவின் கூட்டணி முக்கிய பங்கு வகித்தது. ட்ரம்ப் அரசின் கொள்கைகள் இந்த பிணைப்புக்குச் சவாலாக உள்ளன.
ஐரோப்பாவின் பொருளாதார கொள்கைகளை ட்ரம்ப் அரசு வெளிப்படையாக விமர்சித்துள்ளது. உலக வெப்பமயமாக்கல் முதல் எல்.ஜி.பி.டி.க்யூ வரை பல விஷயங்களில் முரண்கள் எழுந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான அரசியலில் அமெரிக்கா தலையிடத் தொடங்கியுள்ளது.
இதில் மிகவும் நம்மை எச்சரிக்கும் நிகழ்வு என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளில் தலையீடு இல்லாமலேயே அமெரிக்கா உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டதுதான்.
ஐரோப்பாவைத் தள்ளிவைக்கும் இந்த செயல், ஐரோப்பிய நாடுகளை முதுகில் குத்தப்பட்டதாக, பலவீனமாக்கப்பட்டதாக உணர வைப்பதுடன், எதிர்காலத்தில் “நாட்டோ’ நாடுகளின் கூட்டணி பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளது.

