Last Updated:
ரோஹித் சர்மாவின் உடல் எடை குறித்து விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருக்கு, பாஜக செய்தித்தொடர்பாளர் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் தற்போது விளையாடி வருகிறது. பாதுகபாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத இந்திய அணி துபாயில் நடைபெறும் போட்டிகளில் விளையாடி வருகிறது. வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளை தொடர்ச்சியாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. மார்ச் 04 ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
இதனிடையே சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமாக உள்ளது. இங்கிலாந்து தொடரில் சதம் அடித்த ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபியலும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மா துபாயில் நடைபெற்ற போட்டிகளில் ஏதும் சோபிக்கவில்லை. கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இந்திய அணி கேப்டன் ரோஹித் 17 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதைக் குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, ரோஹித் பருமனாகிவிட்டதாக விமர்சித்திருந்தார். இந்திய அணியை வழிநடத்தியவர்களில், இதுவரை ஈர்க்கப்படாத கேப்டன் என்றால் அது ரோஹித்தான் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது விமர்சனத்திற்கு ரோஹித் ரசிகர்கள் உட்பட பலர் எதிர்வினையாற்றி வரும் நிலையில், ராகுல் தலைமையில் 90 தேர்தலில் தோற்றவர்கள் ரோஹித்தை விமர்சிப்பதாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் அன்பின் உருவம் என கூறிக்கொள்பவர்கள், வெறுப்பின் தூதர்களாகவும், அவமானத்தின் தூதர்களாவும் இருப்பதாக விமர்சித்த பூனவல்லா, ஒரு காலத்தில் நாட்டை எதிர்த்தவர்கள், தற்போது இந்திய அணியை குறிவைத்து உருவ கேலியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
March 03, 2025 1:27 PM IST


