இந்த நிலையில் ஜெயலலிதா உடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர்.

