Last Updated:
Banana Leaf: தாமிரபரணி ஆற்றிலிருந்து பாசனம் பெறும் இப்பகுதி வளமான விவசாயப்பகுதியாகத் திகழ்கிறது. இங்கு அறுவடை செய்யப்படும் வாழை இலை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விற்பனையாகின்றது.
தான் செல்லும் வழியெல்லாம் வளமாக்கும் தாமிரபரணி நீர் பாசனத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. இப்பகுதியிலிருந்து தினசரி வாழை இலை, வாழைத்தார் ஆகியவை தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றது.
சக்கை, கற்பூரவள்ளி, கதலி, செவ்வாழை, நேந்திரன் என பல வகை வாழை இங்கு பயிரிடப்படுகிறது. மேலும் இங்கு வாழை பழ சாகுபடிக்கென வாழை மரங்கள் வளர்க்கப்படுவது போல வாழை இலைக்காகவும் பிரத்தியேக ரகங்கள் பயிர் செய்யப்படுகிறது. வாழை இலைக்கென வளர்க்கப்படும் மரங்களில் கிடைக்கும் வாழைத்தார் நன்கு வளர்ச்சி அடையாத பழமாகக் காணப்படும், அதனால் அது சாப்பிடுவதற்கு உகந்த பழமாக இருக்காது.
இது குறித்து விவசாயி அரவிந்த் கூறுகையில், “நான் டிகிரி முடித்து விட்டு விவசாயம் செய்து வருகிறேன். இப்பகுதியில் வாழை இலைக்கென தனியாகத் தோட்டம் இருக்கிறது. குத்தகை எடுத்தும் வளர்க்கப்படுகிறது, சொந்தத் தோட்டத்திலும் வளர்க்கப்படுகிறது. நன்றாக வளர்ந்த வாழை மரத்தில் தார் எடுத்த பின்பு அதன் அருகில் வளரும் பக்கக் கன்றுகளைத் தான் வாழை இலைக்கென வளர்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Summer Season Fruits: கோடை வெயிலில் உடலுக்குக் குளிர்ச்சி தரும் பழங்கள்… களைகட்டும் வாட்டர் ஆப்பிள் விற்பனை…
அந்தக் கன்றுகளை இரண்டு மாதங்கள் வளரவிட்டு அதன் பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாழை இலை வெட்ட ஆரம்பித்து விடுவோம். ஒரு வாழை மரம் நன்கு செழிப்பாக வளர்ந்து ஆரோக்கியமான பழங்களைத் தருவதற்கு அதன் இலைகளும் ஓர் முக்கிய காரணம்.
ஆனால் இந்தக் கன்றுகளில் இரண்டு மாதங்களில் இருந்தே இலைகள் வெட்டப்படுவதால் இதில் வளரும் வாழை தார்கள் ஒன்றுக்கும் ஆகாது. இலைகள் வெட்டிய பின் அதனை 100 புட்டாக கட்டுவோம். ஒரு புட்டிற்கு 2 இலைகள் காணப்படும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
February 22, 2025 12:18 PM IST

