ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதற்கு முன்பாக ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும், முன் அனுமதியையும் கோரினால், அது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும்; தங்களின் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிக் கொள்ள அது பெரும் தடையாக இருக்கும் என்று அரசும், மின்சார வாரியமும் கருதுகின்றன. அதனால் தான், தங்களின் விருப்பப்படி ஒப்பந்தப்புள்ளிகளை கோரி விட்டு, அதற்குப் பிறகு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. இது சட்டப்பூர்வ அமைப்பான தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயலாகும்.

