Last Updated:
குஜராத்தில், காதலியை இம்பிரஸ் செய்ய, புலி கூண்டை தாண்டி மரத்தில் ஏறிய இளைஞர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
காதலியை இம்பிரஸ் செய்வதற்காக, குஜராத்தில் உயிரியல் பூங்காவில் புலி வசிக்கும் பகுதியின் கூண்டை தாண்டி குதித்து அபாயகரமான சாகசம் செய்த இளைஞரால் சர்ச்சை எழுந்தது.
குஜராத் மாநிலம் மணிநகர் பகுதியில், மாநிலம் கன்காரியா லேக் உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இந்த பூங்காவுக்கு அண்மையில் சென்ற இளைஞர் ஒருவர், புலி வசிப்பிடம் அருகே பல அடி உயரம் அமைக்கப்பட்ட இரும்பு வேலியை தாண்டி, மரத்தின் மீது ஏறினார்.
இந்நிலையில், புலியை சீண்டிப்பார்த்த இளைஞர், புலிக்கு பூச்சாண்டி காட்டினார். ஆனால் வேட்டையாடும் மூடில் இல்லாத புலி இளைஞரை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது. இளைஞரின் இந்த விபரீத சாகசங்களை நிதானமாக கவனித்த பூங்கா ஊழியர்களும், பாதுகாவலர்களும், மீண்டும் கூண்டை தாண்டி பழைய இடத்திற்கு வந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். புலி கூண்டில் இளைஞர் செய்த சாகசத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
February 10, 2025 5:50 PM IST


