Last Updated:
தந்தையின் அலட்சியம் காரணமாக அவர் கண்முன்னே குழந்தை துடித்துடித்து உயிரிழந்த நெஞ்சை உறைய வைக்கும் விபத்து காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில், தந்தை கண் முன்னே குழந்தை காரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக்கில் கடந்த 5 ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஒரு ஓட்டலுக்கு வெளியே தனது 2 குழந்தைகளுடன் தந்தை ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.
கார் நிறுத்துமிடம் அருகே தந்தை செல்போனை பயன்படுத்திக் கொண்டே வரும் போது, ஓடி வந்த அவரின் 5 வயது குழந்தை தடுமாறி சறுக்கி கீழே விழுந்தது. அப்போது ஓட்டலுக்குள் நுழைந்த கார் ஒன்று அந்தக் குழந்தையின் மீது ஏறி இறங்கியது.
#महाराष्ट्र नासिक में 5 साल के बच्चे को कार ने कुचला..
बच्चे की मौके पर ही मौत,नासिक के एक बड़े होटल में पीड़ित का पिता अपने दो बच्चों के साथ होटल की लॉबी में जा रहा था,तभी अचानक बच्चा कार के सामने आ गया और हादसे का शिकार हो गया. #maharastra #viralvideo #hadsa #news #sirfsuch pic.twitter.com/SHwlSLsEYS
— ठाkur Ankit Singh (@liveankitknp) February 7, 2025
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல் செல்போனில் மூழ்கியதுதான் இந்த அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணமாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
February 08, 2025 12:15 PM IST
கார் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி… தந்தையின் கண் முன்னே நடந்த சோகம்… பதைபதைக்க வைக்கும் காட்சி


