Last Updated:
இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணியில் 4 முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி தடுமாற்றம் அடையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ள இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இன்று திடீரென அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து இன்னும் 3 வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய ஆட்டக்காரர்களான ஆல் ரவுண்டர் பாட் கம்மின்ஸ், பவுலர் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட மாட்டார்கள். சமீபத்தில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் போது கம்மின்ஸிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதேபோன்று ஹேசல்வுட் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
இருவரும் காயத்திலிருந்து மீளாத நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இருவரும் தவிர்க்கிறார்கள். இதேபோன்று மற்றொரு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் முதுகு வலி காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க – ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கிறாரா ரோகித் சர்மா? பிசிசிஐ கொடுத்த மெசேஜ்
மார்கஸ் ஸ்டாய்னிஸ், பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் மற்றும் மிட்செல் மாஷ் ஆகிய 4 பேரும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் பலமுறை பங்களிப்பு செய்துள்ளனர். இதனால் இவர்கள் இல்லாத அணி கொஞ்சம் தடுமாற்றம் அடையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
February 06, 2025 2:42 PM IST


