Last Updated:
U19 T20 World cup | கோலாலம்பூரில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது இந்திய அணி.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கோலாலம்பூரில் நடைபெற்ற அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது இந்திய அணி. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை டேவினா பெரின் ஒருபுறம் நிதானமாக விளையாடினாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. பெரினா 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் பருனிகா, வைஷ்ணவி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
114 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. திரிஷா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை கமலினி அரைசதம் விளாசி அசத்தினார். ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில், இந்திய அணி 15ஆவது ஓவரில் இலக்கை எட்டியது.
இதையும் படிக்க: IND vs ENG T20 : புனே மேட்ச்சில் த்ரில் வெற்றி.. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
February 01, 2025 12:35 PM IST


