Last Updated:
Aadhaar | ஆதார் கார்டில் உள்ள விவரங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த ஆதார் சட்டத்தின் 57ஆவது பிரிவு அனுமதி வழங்கியது. ஆனால், அது தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி, கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.
ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்களும் சரிபார்த்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஆதார் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
ஆதார் கார்டில் உள்ள விவரங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த ஆதார் சட்டத்தின் 57ஆவது பிரிவு அனுமதி வழங்கியது. ஆனால், அது தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி, கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.
இந்நிலையில், ஆதார் சட்டம் 2016ல் திருத்தம் மேற்கொண்டுள்ள மத்திய அரசு, ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்கள் சரிபார்த்து பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்துள்ளது. அதாவது, ஆதார் விவரங்களை பயன்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங்கள், அதற்கான தேவை குறித்த விவரங்களுடன் மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பரிசீலித்து மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், தங்கள் சேவைகளுக்காக தனிநபர்கள் அளிக்கும் ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்கள் சரிபார்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்
இதையும் படிக்க: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா; டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…
இதன் மூலம், தனியார் நிறுவனங்களின் வர்த்தகம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் தங்கு தடையின்றி பெற முடியும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
February 01, 2025 11:44 AM IST


