• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2026-ல் பொருளாதார வளர்ச்சி 6.3% – 6.8% ஆக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 சொல்வது என்ன? | Economic Survey 2025: India’s economy expected to grow at 6.3% – 6.8% for FY26

GenevaTimes by GenevaTimes
January 31, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
2026-ல் பொருளாதார வளர்ச்சி 6.3% – 6.8% ஆக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 சொல்வது என்ன? | Economic Survey 2025: India’s economy expected to grow at 6.3% – 6.8% for FY26
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் இன்று (ஜன.31) தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்கள்: “2025-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முதன்மையாக வலுவான தனியார் நுகர்வு மற்றும் முதலீடுகள் துணைபுரிகின்றன. இந்தியாவின் வலுவான செயல்திறன் காரணமாக தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை கூறுகிறது.

2025-26-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3% மற்றும் 6.8% வரம்பில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஒருங்கிணைப்பு, நிலையான தனியார் நுகர்வு ஆகியவை காரணமாக உள்நாட்டுப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன.

2023-24 ஆண்டு கால தொழிலாளர் பங்களிப்பு கணக்கெடுப்பு (PLFS) அறிக்கையின்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் வேலையின்மை விகிதம் 2017-18-இல் 6% இலிருந்து 2023-24-இல் 3.2% ஆக படிப்படியாகக் குறைந்துள்ளது. தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (LFPR) மற்றும் தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம் (WPR) ஆகியவையும் அதிகரித்துள்ளன.

Q2 FY25-இல், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.4% ஆக உள்ளது. இது Q2 FY24-இல் 6.6% ஆக இருந்தது. இந்தியாவில் முறைசாரா துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. நிகர ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சந்தாக்கள் நிதியாண்டு 19 இல் 61 லட்சத்திலிருந்து நிதியாண்டு 24-இல் 131 லட்சமாக இரட்டிப்பாகியுள்ளது.

2025 நிதியாண்டில் இதுவரை, உலகளாவிய வர்த்தகம் மந்தமடைந்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சேவைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை அதிகரித்துள்ளன. இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி வளர்ச்சி ஏப்ரல்-நவம்பர் நிதியாண்டில் 12.8% ஆக அதிகரித்தது. கணினி சேவைகள் மற்றும் வணிக சேவைகள் ஏற்றுமதிகள் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதியில் சுமார் 70% ஆகும். ஏப்ரல்-நவம்பர் நிதியாண்டில், சேவை இறக்குமதி 13.9% அதிகரித்தது.

ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் (AB-PMJAY), நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகையில் 40% பேருக்கு சுகாதாரப் பாதுகாப்பை வழங்குகிறது. இது, சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 ஜனவரி 2025 நிலவரப்படி, 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இத்திட்டம் மக்களின் செலவினங்களை குறைத்து, ரூ.1.25 லட்சம் கோடியை அவர்கள் சேமிக்க வழி வகுத்துள்ளது.



Read More

Previous Post

“மக்களுக்கு புதிய சக்தியை அளிக்கும் பட்ஜெட்”

Next Post

ஜனவரி 25ம் தேதி நடைபெற்ற ஊழலுக்கு எதிரான பேரணி தொடர்பாக 13 மாணவர்களைக் காவல்துறையினர் அழைத்துள்ளனர் – Malaysiakini

Next Post
ஜனவரி 25ம் தேதி நடைபெற்ற ஊழலுக்கு எதிரான பேரணி தொடர்பாக 13 மாணவர்களைக் காவல்துறையினர் அழைத்துள்ளனர் – Malaysiakini

ஜனவரி 25ம் தேதி நடைபெற்ற ஊழலுக்கு எதிரான பேரணி தொடர்பாக 13 மாணவர்களைக் காவல்துறையினர் அழைத்துள்ளனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin