• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக பெற வேண்டுமா? இதுதான் விதிமுறைகள்

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக பெற வேண்டுமா? இதுதான் விதிமுறைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஓய்வூதியத்தில், 50 சதவீத ஊதியத்தை உறுதிப்படுத்திய பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து யுபிஎஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. அனைத்து ஊழியர்களும் இப்போது 50 சதவீத முழு ஓய்வூதியம் அல்லது யுபிஎஸ் இன் கீழ் உறுதியான தொகையைப் பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்தது.

ஜனவரி 24, 2025 தேதியிட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட அறிவிக்கையின்படி, ஓய்வு பெற்ற பிறகு தங்கள் கடைசி ஊதியத்தில் முழு 50 சதவீத ஓய்வூதியத்தையும் பெற ஊழியர்கள், பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உறுதியான தொகையை கணக்கிட ஒரு சூத்திரம் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியத் தொகை = (P/2) x (Q/300) x (IC/BC)

இந்த சூத்திரத்தில், P என்பது கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியம், Q என்பது பணியாற்றிய மாதங்களின் எண்ணிக்கை, IC என்பது தனிநபர் நிதி, BC என்பது அளவுகோல் நிதி ஆகும். அறிவிக்கையின்படி Q, 300 ஐ விட அதிகமாக இருந்தால், அது 300 ஆக எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த சூத்திரத்தின்படி, ஜனவரி 1 அன்று சம்பள உயர்வு பெற்று டிசம்பர் 31 அன்று ராஜினாமா செய்பவர்கள் மற்றும் ஜூலை 1 அன்று உயர்வு பெற்று ஜூன் 30 அன்று ராஜினாமா செய்பவர்கள் மட்டுமே உறுதியான தொகை அல்லது ஓய்வூதியத்தை தங்கள் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதமாக (பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இருந்தது போல்) பெற முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதாவது குறைந்தபட்சம் 300 மாத பணி மற்றும் தங்கள் ஓய்வூதிய நிதியில் (IC) அளவுகோல் நிதிக்கு (BC) சமமாக பங்களிப்பு செய்தல் போன்ற மற்ற இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக, யுபிஎஸ் இன் கீழ் ஓய்வூதியத்தொகை, ஊழியர்களின் கடைசி 12 மாதங்களின் அடிப்படை ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். இது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கடைசியாக பெற்ற ஊதியத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிலிருந்து வேறுபட்டது.

எனவே, ஊழியர்கள் தங்கள் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான மாதாந்திர ஓய்வூதியத்தை பெற (இது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இருந்தது போல்), பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள்:

1) அவர்களின் கடைசி 12 மாத சராசரி ஊதியம் அவர்களின் கடைசி ஊதியத்துடன் சமமாக இருக்க வேண்டும்

2) அவர்கள் 300 மாத பணியை முடித்திருக்க வேண்டும்

3) ஓய்வூதிய நிதியில் அவர்களின் பங்களிப்பு அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல் நிதிக்கு சமமாக இருக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: பிற முக்கிய விவரங்கள்

அறிவிக்கையின்படி, “குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிப் பணியை முடித்த பிறகு விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு, அவர் பணியில் தொடர்ந்திருந்தால் ஓய்வு பெற்றிருக்கும் தேதியிலிருந்து உறுதியான தொகை வழங்கப்படும்.”

எளிமையாகச் சொன்னால், 21 வயதில் அரசு வேலையில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றி 46 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால், 60 வயது (ஓய்வு பெறும் வயது)க்குப் பிறகுதான் அவர் ஓய்வூதியத் தொகையைப் பெற முடியும். இருப்பினும், DA மற்றும் குடும்ப ஓய்வூதியத்தில் உயர்கட்டண உதவி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

First Published :

January 28, 2025 1:26 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக பெற வேண்டுமா? இதுதான் விதிமுறைகள்

Read More

Previous Post

வரலாற்றில் அட்டூழியங்கள் படித்தவர்களால் செய்யப்பட்டவை: பிகார் ஆளுநர்

Next Post

உணவகங்களுக்குத் தேவை 25,000 தொழிலாளர்கள் பிரிஸ்மா மனு | Makkal Osai

Next Post
உணவகங்களுக்குத் தேவை 25,000 தொழிலாளர்கள் பிரிஸ்மா மனு | Makkal Osai

உணவகங்களுக்குத் தேவை 25,000 தொழிலாளர்கள் பிரிஸ்மா மனு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin