கோத்தா கினாபாலு:
கோத்தா கினாபாலு நகரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நீர் வழங்கல் தடை அங்குள்ள குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதுடன், பெரும்பாலும் வணிகங்களுக்கு, குறிப்பாக சுற்றுலாத் துறையில், குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தண்ணீர் பிரச்சனைகள் காரணமாக சுற்றுலாப்பயணிகள் மொத்தம் RM30,000 வரை பணத்தைத் திரும்பப் பெறுவதாக ஒரு ஹோம்ஸ்டே நடத்துனர்கள் கூறியதாக பார்ட்டி வாரிசானின் கோத்தா கினாபாலு மாவட்ட செயலாளர் லோய் கோக் லியாங் தெரிவித்தார்.


