நேற்றைய வணிக நேர முடிவில் 17 காசுகள் சரிந்து ரூ. 86.53 காசுகளாக இருந்த நிலையில், இன்று 13 காசுகள் உயர்ந்துள்ளது.
கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு ரூபாய் மதிப்பு, ஒரே நாளில் 0.3% உயர்ந்ததுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.50 ஆகத் தொடங்கி அதிகபட்சமாக ரூ. 86.55 வரை சென்றது. இது நேற்றைய வணிக நேர முடிவை விட கடுமையான சரிவாகும்.
பிற்பாதியில் படிப்படியாக ரூபாய் மதிப்பு உயர்ந்து ரூ. 86.28 காசுகளாக இருந்த நிலையில் வணிக நேர முடிவில் ரூ. 86.40 காசுகளாக நிலைப்பெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், உள்ளூர் பங்குகளும் நேர்மறையாக இருந்ததால், ரூபாய் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
இதேபோன்று சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையும் 0.35 சதவீதம் அதிகரித்து 80.20 டாலர்களாக வணிகமானது.

