கடந்த சில ஆண்டுகளில் சுமாா் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனா். அவா்களில் பலா் நல்ல தொழில் வாய்ப்புகளையும் பெற்றுள்ளனா். பிராந்தியத்தில் பொறியியல், தொழிற்கல்வி நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் பின்தங்கி இருந்த கட்சிரோலி மாவட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் அதிகம் வருவாய் ஈட்டக் கூட்டிய மாவட்டங்களில் ஒன்றாக உயரும். குழந்தைகளுக்கு போதிய ஊட்டசத்து, கல்வி வழங்கி, அவா்கள் இளைஞா்களாகும்போது உரிய வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டால் அவா்கள் தவறான பாதைக்கு மாறுவது குறைந்துவிடும் என்றாா்.

