
16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள், 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள், 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள், 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என எட்டு பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். “16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு 2 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் முதல் அரசு சட்டக்கல்லூரி பெருந்திட்ட வளாகம் வரையிலும்”, “18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 6 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் முதல் அரசு பணிமனை பெருந்திட்ட வளாகம் வரையிலும்”, “18 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கு 4 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் முதல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் பெருந்திட்ட வளாகம் வரையிலும்”, “20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 8 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் முதல் ஜானகிபுரம் சந்திப்பு அருகில் உள்ள பெருந்திட்ட வளாகம் வரையிலும்”, 20 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கு 6 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் – அரசு பணிமனை – பெருந்திட்ட வளாகம் வரையிலும், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் – ஜானகிபுரம் ரவுண்டானா – பெருந்திட்ட வளாகம் வரையிலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா 5000 ரூபாயும், தலா ரூ.3000, தலா ரூ.2000, தலா ரூ.1000, தலா ரூ.1000, தலா ரூ.1000, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா ரூ.6000, தலா ரூ.4000, தலா ரூ.3000, தலா ரூ.2000, தலா ரூ.1000, தலா ரூ.1000, 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா ரூ.7000, தலா ரூ.5000, தலா ரூ.4000, தலா ரூ.3000, தலா ரூ.2000, தலா ரூ.1000, 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா ரூ.10000, தலா ரூ.7000, தலா ரூ.5000, தலா ரூ.4000 என போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.7000, தலா தலா ரூ.3000, தலா ரூ.2000, குழு பரிசு ரூ.5000, தலா ரூ.2000 பரிசுத்தொகையும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் பத்து இடங்களைப் பிடித்த 40 நபர்களுக்கு தலா ரூ.500 மற்றும் அனைத்து பிரிவிலும் முதலில் வரப்பெற்ற 50 நபர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டது மனநிறைவை ஏற்படுத்தியுள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
January 06, 2025 6:38 PM IST

