
Last Updated:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜனவரி 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கும்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில், இந்த தொடரில் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்த தொடர் மிக முக்கியமானது என்பதால், இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை முடிந்துள்ள 4 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது.
இதன் பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜனவரி 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கும்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மூத்த வீரர்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக நடைபெறும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இது என்பது கவனிக்கத்தக்கது
December 31, 2024 8:13 PM IST

