
Last Updated:
இந்த திட்டத்திற்கான பதிவை, பாஜகவினர் தடுக்க முயற்சி செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது மகா பாவம் என்று தெரிவித்துள்ளார்.
இந்து வாக்காளர்களைக் கவரும் வகையில், டெல்லியில் கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்னும் 2 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியைத் தக்கவைக்க, முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 நிதி உதவி வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் சீக்கிய குருத்வாரா கிராந்திகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான பதிவை, பாஜகவினர் தடுக்க முயற்சி செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது மகா பாவம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே டெல்லியில் வக்பு வாரிய இமாம்கள், கெஜ்ரிவாலின் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
December 31, 2024 10:38 AM IST
“கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்” – ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி

