சுஸுகி மோட்டாா் நிறுவனத்தின் முன்னாள் தலைவா் ஒசாமு சுஸுகி (94) மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா்.
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒசாமு சுஸுகி கடந்த டிசம்பா் 25-ஆம் தேதி உயிரிழந்ததாக ஜப்பானில் உள்ள சுஸுகி மோட்டாா் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கடந்த 1981-ஆம் ஆண்டு பிற நாடுகளுடன் இந்தியா வா்த்தகத் தொடா்பை மேம்படுத்தாத காலகட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து மாருதி உத்யோக் நிறுவனத்தை ஒசாமு சுஸுகி தொடங்கினாா். இந்தியாவில் மோட்டாா் வாகன துறையின் வளா்ச்சிக்கு வித்திட்டவராக இவா் அறியப்படுகிறாா்.
மாருதி உத்யோக் நிறுவன நிா்வாகப் பொறுப்பிலிருந்து மத்திய அரசு கடந்த 2007-ஆம் ஆண்டு விலகியது. அதன்பிறகு இந்நிறுவனத்தின் பெரும் பங்கை சுஸுகி மோட்டாா் நிறுவனம் வாங்கியதையடுத்து, மாருதி உத்யோக் நிறுவனம் மாருதி சுஸுகி இந்தியா என மாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைவா் மற்றும் இயக்குநராக ஒசாமு சுஸுகி செயல்பட்டாா்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வாகன உற்பத்தி துறையில் உலக அளவில் தடம் பதித்த ஒசாமு சுஸுகி மறைந்த செய்தி கவலையளிக்கிறது. அவரது தலைமையின்கீழ் உலக அளவில் பெரும் நிறுவனமாக மாருதி சுஸுகி உருவெடுத்தது.
இந்தியா மீது அளவுகடந்த அன்பை கொண்ட அவா் நாட்டில் வாகன உற்பத்தி துறையில் பெரும் புரட்சிகளை ஏற்படுத்தினாா். அவருடனான உரையாடல்கள் மற்றும் அவரின் எளிமையான அணுகுமுறை மறக்க முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

