• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குழந்தை திருமணம் தொடர்பாக அசாமில் ஒரே நாளில் 416 பேர் கைது | 416 people arrested in Assam in a single day in connection with child marriage

GenevaTimes by GenevaTimes
December 23, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
குழந்தை திருமணம் தொடர்பாக அசாமில் ஒரே நாளில் 416 பேர் கைது | 416 people arrested in Assam in a single day in connection with child marriage
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குழந்தை திருமணம் தொடர்பாக அசாமில் ஒரே நாளில் 416 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 2012-13-ம் ஆண்டில் அசாமில் குழந்தை திருமணம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அந்த மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில் சுமார் 35 சதவீதம் குழந்தை திருமணம் என்பது தெரியவந்தது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு தொடங்கியது. முதல்கட்ட நடவடிக்கையின்போது 3,483 பேர் கைது செய்யப்பட்டனர். 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் இரண்டாம் கட்ட நடவடிக்கையை அசாம் அரசு தொடங்கியது. அப்போது 915 பேர் கைது செய்யப்பட்டனர். 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தற்போது 3-ம் கட்டமாக குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையை அசாம் அரசு கடந்த 21-ம் தேதி இரவு தொடங்கியது. இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

குழந்தை திருமணத்துக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 3-ம் கட்ட நடவடிக்கையை டிசம்பர் 21-ம் தேதி இரவு தொடங்கினோம். இதில் 416 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்பட உள்ளனர். இந்த சமூக அநீதிக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமணம் தொடர்பாக அசாமில் ஒரே நாளில் 416 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை 4,814 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.



Read More

Previous Post

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

Next Post

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி – வங்கதேசத்தை வீழ்த்திய சிங்கப்பெண்கள்..! – News18 தமிழ்

Next Post
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி – வங்கதேசத்தை வீழ்த்திய சிங்கப்பெண்கள்..! – News18 தமிழ்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி - வங்கதேசத்தை வீழ்த்திய சிங்கப்பெண்கள்..! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin