புதுடெல்லியில் உள்ள அமெரிக்கன் சென்டரில் வரும் பிப்ரவரி 2, 2025-இல் நடத்தப்படும் பிசினஸ் இன்குபேட்டர் நெக்சஸ், 20-வது கூட்டமைப்பு குழுப் பயிற்சிக்கான (20th Nexus Business Incubator Cohort ) விண்ணப்பங்களை அனுப்பும்படி அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
விண்வெளி, விவசாயத் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, … உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘‘இந்தத் திட்டம்மூலம் தேர்வு செய்யப்படும் 15-இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, தொழிலை மேம்படுத்தவும், அவர்களது இலக்குச் சந்தைகளை வரையறுக்கவும், தயாரிப்பு/தொழில்நுட்பம்குறித்து சந்தைப் பின்னூட்டங்களைப் பெறவும், தங்கள் நிறுவனங்களைச் சந்தைக்குக் கொண்டுவருவதற்கான மைல்கற்களை உருவாக்கவும் இந்திய மற்றும் அமெரிக்க நிபுணர்களிடமிருந்து சிறப்புப் பயிற்சியைப் பெறுவதற்கான நல்வாய்ப்பு இது.

