• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டு கட்டாக பணம்! நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
December 6, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டு கட்டாக பணம்! நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி துவங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் ஆளும் பாஜக கூட்டணி அரசு பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மறுபுறம், இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள், மணிப்பூர், அதானி, உ.பி. சம்பல் மசூதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என அவைகளில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கிவருகின்றனர். ஆனால், மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவைத் தலைவரும் தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள், அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தினமும் அவை கூடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்

நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி மீது மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியபோது, அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் கூறியதாவது; “நேற்று அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு அதிகாரிகளால் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

இதற்கு அவையில் உடனடியாக பதில் தந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது. எனவே அது உறுதி செய்யும் வரை அவரது பெயரைக் குறிப்பிடக்கூடாது” என்று தெரிவித்தார். இதற்கு பதில் தந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இருக்கை எண் மற்றும் எம்.பி.யின் பெயரை சொல்வதில் தவறில்லை. நாடாளுமன்றத்திற்குள் கட்டு கட்டாக பணம் கொண்டுவருவது ஏற்புடையதா? இந்த விவகாரத்தில் உரிய விசாரணை வேண்டும்” என்று தெரிவித்தார்.

விளம்பரம்
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற வைட்டமின்-பி நிறைந்த 6 காய்கறிகள்.!


இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற வைட்டமின்-பி நிறைந்த 6 காய்கறிகள்.!

இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், இதற்கு அபிஷேக் மனு சிங்வி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர், “நேற்று பிற்பகல் 12.57 மணிக்கு நான் நாடாளுமன்றத்திற்குள் வந்தேன். நான் வந்த மூன்று நிமிடத்தில் அவை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு நாடாளுமன்ற உணவகத்திற்கு ஒரு மணிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு சென்றுவிட்டேன். அதுமட்டுமல்லாமல் நேற்று என் கையில் வெறும் ஒரே ஒரு ரூ.500 தாளை மட்டுமே எடுத்துவந்தேன். எனவே எனது இருக்கையில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் என்னுடையது அல்ல” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “இந்தச் செயல் நாடாளுமன்றத்தின் மதிப்பை பாழாக்கும் செயல். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் :
Gujarat: மருத்துவ பட்டப்படிப்புக்கு ரூ.70,000.. 14 போலி மருத்துவர்கள் கைது.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

நாடாளுமன்றத்திற்குள் எம்.பி. ஒருவரின் இருக்கையில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

வருமானம், செலவு அறிக்கை சமர்பிப்பதற்கான காலக்கெடு நிறைவு

Next Post

ஸ்டார்க் அசுர வேகம்.. தட்டி தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆல்அவுட்! பகலிரவு டெஸ்டில் ஒரு இரவு கூட தாக்குபிடிக்க முடியல

Next Post
ஸ்டார்க் அசுர வேகம்.. தட்டி தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆல்அவுட்! பகலிரவு டெஸ்டில் ஒரு இரவு கூட தாக்குபிடிக்க முடியல

ஸ்டார்க் அசுர வேகம்.. தட்டி தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆல்அவுட்! பகலிரவு டெஸ்டில் ஒரு இரவு கூட தாக்குபிடிக்க முடியல

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin