• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவின் தொழில் வளர்ச்சிக் கொள்கைகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு | Putin praises PM Modi’s “India-First” Policy and “Make in India” Initiative

GenevaTimes by GenevaTimes
December 5, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்தியாவின் தொழில் வளர்ச்சிக் கொள்கைகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு | Putin praises PM Modi’s “India-First” Policy and “Make in India” Initiative
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாஸ்கோ: 15-வது விடிபி ரஷ்யா முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியின் “இந்தியா முதலில்” கொள்கை மற்றும் “இந்தியாவில் தயாரிப்போம்” முன்முயற்சி ஆகியவற்றை பாராட்டினார். வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் குறிப்பிட்டுப் பேசிய புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

15-வது விடிபி ரஷ்யா முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “உற்பத்தியை ஊக்குவிப்பது, அந்நிய முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட “இந்தியாவில் தயாரிப்போம்” முன்முயற்சி, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எஸ்.எம்.இ) ஏற்ற “நிலையான சூழல்களை” உருவாக்குவதில் இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துள்ள “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டம் சிறப்பான பாராட்டுக்குரியது.

ரஷ்யாவின் இறக்குமதி மாற்று திட்டத்திற்கும், இந்தியாவின் “இந்தியாவில் தயாரிப்போம்” முன்முயற்சிக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செயல்பாடுகளை நிறுவ வேண்டும் என்பதில் ரஷ்யா விருப்பம் கொண்டுள்ளது. இந்தியாவின் தலைமை, தனது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

பிரதமரின் தலைமையின் கீழ், இந்தியாவை முதன்மைப்படுத்தும் கொள்கையால் உந்தப்பட்டு நிலையான சூழல்களை இந்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று நாங்கள் நம்புகிறோம். ரஷ்ய நிறுவனமான ரோஸ்நெஃப்ட் சமீபத்தில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பிரிக்ஸ் + நாடுகளில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சுமூகமான வணிகப் பரிவர்த்தனைகளை எளிதாக்க விரைவான தகராறு தீர்வு வழிமுறை அவசியம்.

நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் உள்ளூர் ரஷ்ய உற்பத்தியாளர்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். சந்தையில் இருந்து வெளியேறிய மேற்கத்திய வணிக முத்திரைப் பொருட்களுக்குப் பதிலாக புதிய ரஷ்ய பொருட்கள் எழுச்சி பெற்றுள்ளன.

எங்களைப் பொறுத்தவரை, எங்கள் இறக்குமதி மாற்று திட்டத்தின் ஒரு பகுதியாக இது மிகவும் முக்கியமானது. புதிய ரஷ்ய வணிக முத்திரைப் பொருட்களின் தோற்றம் தானாக முன்வந்து எங்கள் சந்தையை விட்டு வெளியேறிய மேற்கத்திய நிறுவனங்களை மாற்ற உதவுகிறது. எங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்கள் நுகர்வோர் பொருட்களில் மட்டுமல்ல, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயர் தொழில்நுட்ப தொழில்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளனர்.

சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க பிரிக்ஸ் நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு தேவை. அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் ஒத்துழைப்புக்கான முக்கிய பகுதிகளை உறுப்பு நாடுகள் அடையாளம் காண வேண்டும். பிரிக்ஸ் அமைப்புடன் ரஷ்யா உருவாக்கி வரும் முதலீட்டு தளம் அனைத்து கூட்டாளி நாடுகளுக்கும் பயனளிக்கும். நமது பொருளாதாரங்களை ஆதரிப்பதற்கும் உலகின் தெற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு நிதி ஆதாரங்களை வழங்குவதற்கும் இது ஒரு முக்கிய கருவியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளில் தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்யுமாறு எனது பிரிக்ஸ் சக நாடுகளைக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பை வழிநடத்தும் எங்கள் பிரேசிலிய சகாக்களின் கவனத்திற்கு இதை நிச்சயமாக கொண்டு வருவோம்” என்று தெரிவித்தார்.



Read More

Previous Post

அச்சுறுத்தும் கொலை மிரட்டல்; ஃபட்னாவிஸ் பதவி ஏற்பில் பங்கேற்ற முக்கிய நபர்

Next Post

பிலிப்பைன்ஸ் நாட்டின் படகை மோதித் தள்ளிய சீன கடற்படை கப்பல்…

Next Post
பிலிப்பைன்ஸ் நாட்டின் படகை மோதித் தள்ளிய சீன கடற்படை கப்பல்…

பிலிப்பைன்ஸ் நாட்டின் படகை மோதித் தள்ளிய சீன கடற்படை கப்பல்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin