திருவனந்தபுரம்;
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. உணவு, குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த கோரியும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

