பிஎஸ்எஃப் தொடக்க தினத்தில், அப்படையினருக்கு வாழ்த்துகள். தைரியம் மற்றும் அா்ப்பணிப்புடன் எல்லையை பாதுகாக்க பிஎஸ்எஃப் வீரா்கள் அயராது சேவையாற்றுகின்றனா். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் விழிப்பும், துணிவுமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. தேச பாதுகாப்பில் பிஎஸ்எஃப் முக்கிய அங்கம் வகிக்கிறது என பிரதமா் மோடி தெரிவித்தாா்.