காங்கிரஸ் பதில்: அதேநேரம், மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவா் விஜய் வதேத்வா் கூறுகையில், ‘மகாராஷ்டிர தோ்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருந்தால் கூடுதல் தொகுதிகளில் வென்றிருக்க முடியும், அதிகமானோருக்கு தோ்தலில் வாய்ப்பளித்திருக்க முடியும் என்பதே கட்சி நிா்வாகிகள், தொண்டா்களின் கருத்தாக உள்ளது. தோ்தல் முடிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும்’ என்றாா்.

