கிராமம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இந்த கிராமம் ஆனது இந்தியாவில் உள்ள மற்ற கிராமங்களை விட மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ‘ப்யூர் சர்க்காரி’ என்ற கிராமம் அதன் தனித்துவமான அடையாளத்திற்காக பிரபலமானது. இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒரு நபர் அரசு வேலைகளுடன் தொடர்புடையவர்களாக இருப்பதால், அதன் பெயர் “ப்யூர் கவர்ன்மென்ட்” என்று ஆகிவிட்டது. இந்த கிராமத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
இது குறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் ஷரண் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது, தானும் சுகாதாரத் துறையில் இருந்ததாகவும், இப்போது அவர் ஓய்வு பெற்றதாகவும் கூறியுள்ளார். இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக யாராவது ஒருவர் அரசு வேலையில் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
கோண்டா மாவட்டத்தின் நவாப்கஞ்ச்-மங்காபூர் சாலையில் அமைந்துள்ள இந்த கிராமம் ‘புயூர் சர்க்காரி’ என்ற குக்கிராமத்தின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் அதன் கிராம பஞ்சாயத்தின் பெயர் “பஹதுரா” என்பதாகும். இந்த கிராமம் ஆனது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்தி, சுல்தான்பூர் மற்றும் அயோத்தி ஆகிய இடங்களில் இருந்து வந்த மூன்று குடும்பங்களால் நிறுவப்பட்டதாகும்.
“ப்யூர் கவர்ன்மென்ட்” என்ற பெயர் எப்படி வந்தது?
இந்த கிராமத்தின் பெயர் விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் அந்த பெயரின் காரணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது அரசாங்க வேலையில் உள்ளனர், அதனால்தான் இந்த கிராமம் “ப்யூர் கவர்ன்மென்ட்” என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமம் ஆனது பார்வதி அர்க் ஏரியின் கரையில் அமைந்துள்ளதால், அதன் அழகை மேலும் அதிகப்படுத்துகிறது.
இங்குள்ள மக்கள் என்னென்ன பதவிகளில் பணிபுரிகிறார்கள்?
இந்த கிராமத்தைச் சேர்ந்த கிஸ் மோகன் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது, இங்குள்ள கிராம மக்கள் பொறியாளர்கள், மருத்துவர்கள், அரசு ஆசிரியர்கள், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர். முந்தைய காலத்தில் பெரும்பாலானோர் ரயில்வே துறையில் பணிபுரிந்து வந்தனர். ஆனால் தற்போது இந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் பொறியாளர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள் போன்ற பல்வேறு பதவிகளில் இருப்பது கிராமத்தின் பெருமையை மேலும் உயர்த்துகிறது.
கிராமத்தின் சிறப்பு:
அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் புகழ்பெற்ற பாரம்பரியங்கள் காரணமாக, இந்த கிராமம் கோண்டாவில் மட்டுமல்ல, முழு உத்தரபிரதேசத்திலும் ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளது. இங்குள்ள குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகளாக காணப்படுகிறார்கள், அவர்களும் எதிர்காலத்தில் அரசு வேலை செய்ய ஆசைப்படுவது இந்த கிராமத்தின் சிறப்பை இன்னும் உயரத்துகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)