
சீனாவில் நேற்றுமுன்தினம் விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது கார் மோதியதில் 35 பேர் உயிரிழந்தனர். 43 பேர் படுகாயமடைந்தனர்.
சீனாவில் ஜூஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் மக்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றது. திங்கள் கிழமை இரவு 7 மணி போல் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

