ரொனால்டோ, மெஸ்ஸி, கோலி மற்றும் தோனிக்கு இணையான உலகின் பணக்கார விளையாட்டு வீரர் மற்றும் அவரது நிகர மதிப்பு என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
விளையாட்டு உலகில் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் பணக்காரர் என்ற பட்டத்தை வைத்திருப்பவர் யார் என்பதில் சிறிய விவாதம் உள்ளது. உலக அளவில் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக கருதப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) விட, இந்த தடகள வீரரிடம் பணம் அதிகமாக உள்ளது. பிசிசிஐயின் சொத்து மதிப்பு ரூ.16,493 கோடியாக உள்ளது. இந்த நிகர மதிப்பை மிஞ்சிய ஒருவர் உள்ளார். அவர் தான் மைக்கேல் ஜோர்டன் (Michael Jordan).
முன்னாள் கூடைப்பந்து வீரரும், தற்போதைய தொழிலதிபருமான மைக்கேல் ஜோர்டனின் நிகர மதிப்பு $3.5 பில்லியன் (ரூ.29,000 கோடிக்கு மேல்) என மதிப்பிடப்பட்டுள்ளது. கூடைப்பந்து ஆட்டத்தில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் ஜோர்டன், விளையாட்டு மற்றும் NBA இரண்டையும் உலகளவில் பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். 1984 முதல் 2003ஆம் ஆண்டு வரை 15 சீசன்களில் தனது விளையாட்டு வாழ்க்கையை தொடர்ந்தார். மேலும், சிகாகோ புல்ஸ் கூடைப்பந்து அணியுடன் 6 NBA சாம்பியன்ஷிப்பை பெற்றார்.
குறிப்பிடத்தக்க வகையில், ஓய்வுபெற்ற இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகும், ஜோர்டானின் நட்சத்திர பலமும் வருமானமும் குறையாமல் உள்ளது. அவரது விளையாட்டு வாழ்க்கையில், அவர் வெறும் $94 மில்லியன் சம்பாதித்தார். மேலும், இரண்டு சீசன்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் பெற்ற NBA வீரராக இருந்தார். இந்நிலையில், ஜோர்டானின் வருவாயை வேறுபடுத்தியது அவரது லாபகரமான ஒப்புதல் ஒப்பந்தங்கள் ஆகும்.
ஜோர்டன் இன்னும் பல முக்கிய பிராண்டுகளான கேடோரேட், 2 கே கேம்ஸ், ஃபைவ் ஸ்டார் ஃபிராக்ரன்ஸ் மற்றும் அப்பர் டெக் ஆகியவற்றுடன் ஒப்புதல் ஒப்பந்தங்களை வைத்திருக்கிறார். இருப்பினும், நைக் அவரது மிகப்பெரிய வருமான ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அவருக்கு நைக் $250 மில்லியன் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. 2023ல் விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்தார். ஜோர்டன் தனது பங்குகளை NBA குழுவான சார்லோட் ஹார்னெட்ஸில் விற்றதன் மூலம், அவரது செல்வம் கணிசமாக உயர்ந்தது.
.
&w=750&resize=750,375&ssl=1)
