பேட்டிங் செய்வதற்கு கடினமாக, ஸ்பின்னர்களுக்கு நன்கு பந்து திரும்பும் விதமாகவும் இருந்த ஆடுகளத்தில் இந்த கடினமான இலக்கை சேஸ் செய்த இந்தியாவுக்கு ஓபனர் ஜெயஸ்வால் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். அரைசதமடித்த ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 77 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அனுபவ வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா 8, விராட் கோலி 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தனர்.

