நேபாளத்தில் 40 பயணிகளுடன் சென்ற இந்திய பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. 14 பேர் உயிரிழந்த நிலையில், மற்ற பயணிகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய பதிவெண் கொண்ட பேருந்து பொக்காராவில் இருந்து 40 பயணிகளுடன் நேப்பாள தலைநகர் காத்மாண்டுவுக்குப் புறப்பட்டது. தனாஹுன் மாவட்டத்தின் மர்ஸ்யங்கடி பகுதியில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, மர்சங்கடி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. ஆபத்தான திருப்பத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் பலர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த விபத்து குறித்து தனாஹூன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீப்குமார் ராயா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ‘UP FT 7623’ என்ற பதிவெண் கொண்ட பேருந்து ஆற்றில் விழுந்து கரையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.போகாராவில் இருந்து நேபாள தலைநகரான காத்மாண்டுவுக்கு செல்லும் போது பேருந்து விபத்துக்குள்ளானதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் பலர் இந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த பேருந்து விபத்து சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த யாராவது பேருந்தில் இருந்தார்களா என்பதை பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்த விபத்தில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
