ஒவ்வொரு மூத்த குடிமகனும் ஒரு நம்பகமான சேமிப்பு திட்டத்தின் மூலம் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். எனவே மூத்த குடிமக்களுக்கான அத்தகைய திட்டங்களில் ஒன்று மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகும். இது அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் அரசாங்க ஆதரவு திட்டமாகும். அரசாங்க ஆதரவுடன் இருப்பதால், இது முதலீட்டிற்கு உத்தரவாதமான வருமானத்தை அளிக்கிறது. மேலும், நல்ல வட்டி விகிதங்களுடன் பாதுகாப்பான முதலீட்டைத் தேடும் முதியவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது.
SCSS: முக்கிய அம்சங்கள்
அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
SCSS-ன் கீழ் அதிகபட்ச முதலீட்டு வரம்பு
இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ரூ.30 லட்சம் ஆகும்.
SCSS: முதலீட்டு காலம்
அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும், இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.
SCSS: வயது வரம்பு
இத்திட்டத்தில் பயன்பெற, ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அதே நேரத்தில், விருப்ப ஓய்வு அல்லது சிறப்பு VRS பெற்ற நபர்களும் SCSS திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள்
SCSS: வட்டி விகிதம்
2014 ஆம் தியாண்டின் இரண்டாவது காலாண்டில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்க்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உள்ளது.
SCSS -ன் வரிச் சலுகைகள் என்ன?
SCSS திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம்.
5 ஆண்டுகளுக்கு மேல் காலத்தை நீட்டிக்க விரும்பினால்?
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தின் பலன்களைத் தொடர விரும்பினால், டெபாசிட் தொகை முதிர்ச்சியடைந்த பிறகு, கணக்குக் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இது முதிர்ச்சியடைந்த ஒரு வருடத்திற்குள் நீட்டிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் கணக்கை முன்கூட்டியே மூடுவதும் அனுமதிக்கப்படுகிறது.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
SCSS கணக்கை எவ்வாறு திறப்பது?
எந்தவொரு தபால் அலுவலகத்திலும் அல்லது நியமிக்கப்பட்ட வங்கி கிளையிலும் SCSS கணக்கைத் திறக்கலாம். இதற்கு, உங்கள் விவரங்கள், வயதுச் சான்று மற்றும் KYC ஆவணங்களுடன் ஒரு விண்ணப்பப் படிவம் தேவைப்படும். இந்தத் திட்டத்தில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்யலாம். கூடுதல் டெபாசிட் அனுமதிக்கப்படாது. அதேபோல பலமுறை தொகையை திரும்பப் பெறவும் முடியாது.
சலுகைகள் வழங்கும் வங்கிகள்:
ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பேங்க் ஆஃப் பரோடா (பிஓபி), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை அடங்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)