குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், சிங்கப்பூரில் குரங்கு அம்மை நோயால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்றும் அழைக்கின்றனர். மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து தற்போது பல்வேறு நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.
Also Read:
விஜய் கட்சி கொடியில் அடுத்தடுத்து சர்ச்சை… தமிழக வெற்றிக் கழகத்தின் அதிரடி முடிவு இதுதான்?
தனிமைப்படுத்தி கொள்வது அவசியம்
குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர் மற்றும் சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது அவசியம்.
இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு வரக்கூடும் என்பதால், பல்வேறு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் எம்பாக்ஸ் கிளேட் 2 நோய்த் தொற்றினால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)