வங்கக் கரையோரம் அமைந்திருக்கும் தூத்துக்குடி மீன்பிடித் தொழில் முக்கிய பங்காற்றுகின்றது. தூத்துக்குடியில் மீன்பிடித் துறைமுகம், தருவைக்குளம், வேம்பார் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்றனர்.
தூத்துக்குடியில் பிடிக்கப்படும் மீன்கள் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தூத்துக்குடி இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தூத்துக்குடி நகர் பகுதியில் மீன் விற்பனைக்கு என பிரத்தியேகமான மார்க்கெட்டும் இயங்கி வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் அனைத்து வகையான மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட் தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பரபரப்பாகச் செயல்படுகிறது. நகரின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து தங்களுக்குத் தேவையான மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: சிறந்த கல்லூரிகள் தரவரிசையில் சிறப்பான இடம்… பெருமையைத் தக்க வைத்த தென்னகத்து ஆக்ஸ்போர்டு…
இது குறித்து வியாபாரி பாலா கூறுகையில், “தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நண்டு, கனவா, இறால், சாலை, நெத்திலி, நகர, ஷீலா, ஊளி போன்ற அனைத்து மீன்களும் இங்கு கொண்டுவரப்படுகிறது. மீன் வரத்துக்கேற்ப ஒவ்வொரு நாளும் விலையும் மாறுபடும்.
தற்போது நண்டு விலை மிகக் குறைந்திருக்கிறது. ப்ளூ கிராப் ரூ.550 வரை விற்பனையாகின்றது. வெள்ள வாவல் கிலோ ரூ.1000ற்கு விற்பனை ஆகின்றது. கருப்பு வாவல் ரூ.500 வரை விற்பனையாகின்றது, சின்ன இறால் ரூ.250 வரை விற்பனை ஆகிறது. பெரிய இறால் ரூ.200, சங்கரா மீன் ரூ.300, நெத்திலி ரூ.300, கிளைக்கான் ரூ.450, கனவா மீன் ரூ.350, சின்ன வஞ்சரம் ரூ.700, பெரிய வஞ்சரம் ரூ.1000 வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
