• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அன்று பிரிவினையால் குடும்பத்தை இழந்த நபர்.. இன்று இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.. யார் இவர்?

GenevaTimes by GenevaTimes
August 5, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
அன்று பிரிவினையால் குடும்பத்தை இழந்த நபர்.. இன்று இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.. யார் இவர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1947-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினை என்பது உலக வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம் ஆகும். பிரிவினையின் போது ஆயிரக்கணக்கானோர் பலியானதோடு லட்சக்கணக்கானோரின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது. பலர் தங்கள் வீடுகளில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டு, அதுவரை தாங்கள் வாழ்ந்து வந்த ஊரையும் வாழ்வாதாரத்தையும் விட்டுவிட்டு வெளியேறினர். இந்த  நிகழ்வு பல தனிநபர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தது.

அதுவரை மாட மாளிகையில் வசித்து வந்த பலர், அடுத்தவேளை உணவிற்கு திண்டாடினர். தங்கள் சொந்த ஊரில், அபரிமிதமான செல்வத்தையும் பணத்தையும் வைத்திருந்த தனிநபர்கள் பலரும், பிரிவினையின் போது தாங்கள் கடினமாக உழைத்து சேர்த்த அனைத்தையும் இழந்தனர். இருப்பினும், சில தனிநபர்கள் இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து வெளியேறி, வாழ்க்கையில் பெரிய ஒன்றை அடைய முயற்சி செய்தனர். அவர்களில் ஒருவர்தான் வினோத் அகர்வால். பல கடினமான சூழ்நிலைகளை அனுபவித்த இவர், இன்று மத்திய பிரதேசத்தின் பெரும் பணக்கரராக இருக்கிறார்.

விளம்பரம்

மத்தியப் பிரதேசத்தின் வணிகத் தலைநகரான இந்தூரில் பல பெரிய தொழிலதிபர்கள் உள்ளனர். அவர்களில் நிலக்கரி தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் வினோத் அகர்வாலும் ஒருவர்.

அகர்வால் நிலக்கரி கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் மேலாண்மை இயக்குனரான வினோத் அகர்வால், மத்திய பிரதேசத்தின் பணக்கார நபராவார். IIFL Hurun-ன் படியலின் படி, இந்தியாவின் 1037 பணக்காரர்களின் பட்டியலில் 279-வது இடத்தை இவர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவருடைய சொத்து மதிப்பு ரூ.6,000 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: 
மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சையை விட அதிக சம்பளம்; இவர் பணிபுரிவது எங்கு தெரியுமா?

விளம்பரம்

அகர்வால் நிலக்கரி நிறுவனத்தின் மொத்த வருவாய் சுமார் ரூ.10,000 கோடி ஆகும். 2022-ம் ஆண்டில், வினோத் அகர்வால் ரூ.243 கோடிக்கு வருமான வரியும், ஜிஎஸ்டியாக ரூ.625 கோடியும் செலுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

நாட்டின் பணக்காரர்களில் ஒருவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், தொண்டுள்ளத்திற்கும் பெயர் பெற்றவர் அகர்வால். 2022-ம் ஆண்டில், வினோத் அகர்வால் அறக்கட்டளைக்கு ரூ.25 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது. அகர்வால் நிலக்கரி கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்  அதிக வரி செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

விளம்பரம்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையில்  தனது குடும்பம் அனைத்தையும் இழந்து, எளிய பின்னனியில் இருந்து வந்தவர் வினோத் அகர்வால். அவர் தனது குடும்பத்துடன் இந்தூருக்குச் சென்றபோது அவருக்கு வெறும் 3 வயதுதான் ஆகியிருந்தது.

வயதுக்கு ஏற்ப தினமும் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா.?


வயதுக்கு ஏற்ப தினமும் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா.?

500 சதுர அடி கொண்ட வீட்டில் தனது 8 உடன்பிறப்புகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார் வினோத் அகர்வால். தனது வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், அதையெல்லாம் சமாளித்து மகத்தான வெற்றியைப் பெற அவரால் முடிந்தது. இந்த குணம் தான் அவரை மத்தியப் பிரதேசத்தின் பணக்காரர் என்ற பெயரெடுக்க வழிவகுத்தது.

விளம்பரம்

.

Read More

Previous Post

பயணியின் தலையில் பேன்; அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்… என்ன சொல்கிறது American Airlines?

Next Post

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா: இடைக்கால அரசை அமைத்தது வங்கதேச ராணுவம் | Sheikh Hasina resigns, Sheikh Hasina to form interim government

Next Post
பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா: இடைக்கால அரசை அமைத்தது வங்கதேச ராணுவம் | Sheikh Hasina resigns, Sheikh Hasina to form interim government

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா: இடைக்கால அரசை அமைத்தது வங்கதேச ராணுவம் | Sheikh Hasina resigns, Sheikh Hasina to form interim government

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin