பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை மற்றும் ராஃபிள்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் SCDF கூறியது.அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று கூறினார்.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்குப் பதிலளித்த பைட் டான்ஸ் அதிகாரி ஒருவர், “எங்கள் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம்.அவசரகால சேவைகளுடன் பணியாற்றுவது உட்பட அனைத்தும் செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது நச்சுணவு சம்பவம் இதுவாகும்.