நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்தில்கொண்டு, 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முற்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தல், நாளை திங்கட்கிழமை காலை 07 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


