• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்த ஆண்டு உற்பத்தி மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளில் 68,000 பேர் வேலை இழப்பு – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் 16 வரை மொத்தம் 68,177 தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்; இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 15,196 அதிகரிப்பாகும் என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நசீர் தெரிவித்துள்ளார்.

வேலை இழப்புகளால் உற்பத்தித் துறை, மற்றும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகள் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் அடங்கும் என்று அக்மல் கூறினார்.

இருப்பினும், ஒட்டுமொத்த தொழிலாளர் சந்தை தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும், ஜூலை மாத நிலவரப்படி வேலையின்மை விகிதம் எவ்வித மாற்றமுமின்றி 3 விழுக்காடாக (3%) நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்மல், இக்காலகட்டத்தில் சமூக பாதுகாப்பு அமைப்பு (பெர்கேசோ) வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டம் மற்றும் ‘மைபியூச்சர்ஜாப்ஸ்’ மூலம் 143,653 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க உதவியுள்ளதாகக் கூறினார்.

இது, அரசாங்கத்தின் தலையீடு தற்காலிக ஆதரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பவும் உதவுகிறது என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

வணிகங்கள் அதிக செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் பணி மூலதனச் செலவுகளை எதிர்கொள்வதாகவும், குறிப்பாகச் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேர்மறையான அம்சமாக, மேற்கு ஆசிய மோதல்களினால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியிலும், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களைத் தொடர்ந்து பெற முடிவதாகக் மலேசிய மத்திய வங்கி கண்டறிந்துள்ளது.

மேலும், மேற்கு ஆசியாவின் இடையூறுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் 52 முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அடையாளம் கண்டுள்ளது.

விநியோகத் தொடர் (supply chain) அபாயங்களைக் குறைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு மலேசியாவை ஒரு வேர்ல்ட்+1 இலக்காக மாற்றுவதும் இந்த முன்மொழிவுகளில் அடங்கும்.

இந்த முன்முயற்சியானது மலேசியாவை ஒரு நிலையான, நடுநிலையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு மற்றும் வர்த்தக தளமாக நிலைநிறுத்தும். குறிப்பாக குறைக்கடத்தி (semiconductor), விண்வெளி, மருத்துவ உபகரணங்கள், ஆட்டோமேஷன், பசுமை ஆற்றல் மற்றும் முக்கியமான தாதுக்கள் ஆகிய துறைகளுக்கு இது பெரிதும் உதவும்.

பினாங்கில் விமான சரக்கு மையங்கள் அமைக்கும் சாத்தியக்கூறுகளுடன், குறைக்கடத்தி தொழில்துறைக்கான விமான மற்றும் பன்முறைமை தளவாட மையமாக மலேசியாவின் பங்கை வலுப்படுத்தவும் நாடு திட்டமிட்டுள்ளதாக அக்மல் கூறினார். செனாய் மற்றும் கேஎல்ஐஏ ஏரோபோலிஸ் ஆகிய இடங்களும் இதில் அடங்கும்.

23 புதிய சந்தைகள் உட்பட 36 சாத்தியமான ஏற்றுமதி சந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதே வேளையில் எண்ணெய் மற்றும் எரிவாயு, கட்டுமானத் துறைகள் மற்றும் மேற்கு ஆசியாவின் மறுசீரமைப்புத் திட்டங்களிலும் வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய அமைச்சகங்கள் இந்த முன்மொழிவுகளை அவற்றின் முன்னுரிமை, சாத்தியக்கூறு மற்றும் பொருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

 

 

-fmt



Read More

Previous Post

டிரம்ப்க்கு ஆட்டம் காட்டும் சீனா.. தங்கத்தை மலை மலையாய் வாங்கி குவிப்பு.. இந்தியா ஒரு படி மேல்! | US Debt Reaches $40 Trillion: China Cuts US Treasuries to Buy Gold While India Surges Reserves by 58%

Next Post

170க்கும் மேற்பட்டோர் பலி அமெரிக்க தாக்குதல்! போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கிறது ஐ.நா

Next Post
170க்கும் மேற்பட்டோர் பலி அமெரிக்க தாக்குதல்! போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கிறது ஐ.நா

170க்கும் மேற்பட்டோர் பலி அமெரிக்க தாக்குதல்! போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கிறது ஐ.நா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin