Last Updated:
மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு.
மேற்குவங்கம் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீது அவ்வப்போது முட்டை வீசும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று (16ஆம் தேதி) திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா, மேற்குவங்கம் மாநிலம், நதியா மாவட்டத்தில் உள்ள தெஹட்டா பகுதியில் நடைபெற்ற தன் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார். அப்போது அங்கு திடீரென குவிந்த சிலர் மொஹுவா மொய்த்ரா மீதும், அவரது கார் மீதும் முட்டைகளை வீசியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில், “நீதிபதி திபங்கர் தத்தாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கூட்டத்திற்காக நான் எனது தொகுதிக்குச் சென்றிருந்தேன்; இது குறித்து மேற்கு வங்கக் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தும், பாஜகவினர் அவர்களின் உதவியுடன் என் மீது முட்டைகளை வீசினர். உங்கள் அறிவுரைப்படியே, ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொண்டதைப் போல நானும் அவர்களை எதிர்கொண்டேன்.
Big shout out to Hon’ble Justice Dipankar Datta ! MiLord – I came to my constituency for a mtng informing @WBPolice & BJP workers with their help pelted eggs on me. True to your advice I faced them as a freedom fighter faced bullets. pic.twitter.com/CxO3ApzjPL
— Mahua Moitra (@MahuaMoitra) September 16, 2026
நீதிபதி தீபங்கர் தத்தா மாண்புமிகு பிரபுவே, இன்று நான் அதிகாரப்பூர்வமாக சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும் ஆகியுள்ளேன். நான் வெளியேறியபோது, பாஜகவின் அலுவலகப் பொறுப்பாளர்கள் (பொதுமக்கள் அல்ல) என் கூட்டத்தைச் சூழ்ந்துகொண்டு என் மீது முட்டைகளை வீசினர். எங்கள் அரசியலமைப்புப் பாதுகாப்புகளை நிலைநிறுத்தியமைக்கு நன்றி, மாண்புமிகு பிரபுவே” எனத் தெரிவித்துள்ளார்.


