நாட்டின் பணத்தை வீணடிக்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் தெரிவித்தார்.
நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் இல்லாத நிலையில், ஜனாதிபதி நாடு முழுவதும் பயணம் செய்து இதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்வது பெரும் பண விரயம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பொய் சொல்லி கூட்டத்தை நடத்தும் அரச தலைவர்
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
சாகர கரியவசம் மேலும் கூறியதாவது:

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களோ அல்லது அபிவிருத்திகளோ இல்லாமல், தேர்தலுக்கு முன்பு செய்வது போல பொய் சொல்லி, பொய் வாக்குறுதிகளை அளித்து, அரசாங்க அதிகாரத்தைக் கொண்ட ஒரு அரச தலைவர் கூட்டங்களை நடத்துவதை நாம் காண்கிறோம்.
இது நாட்டின் பணத்தை முழுமையாக வீணடிப்பதாகும். இந்தக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் நமது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

