Last Updated:
சர்வதேச அமைப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனச் சீன அதிபர் கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று “போட்டியாளர்கள் அல்ல, பார்ட்னர்கள்” என்றும், இரண்டு நாடுகளின் வளர்ச்சியும் “அச்சுறுத்தல் அல்ல, வாய்ப்புகள்” என்றும் முக்கியக் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.


